திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி..,
புகைப்படத்திற்கும் முகம்காட்டி...,
பரிசொன்றை தந்து....,
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு...,
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...
பத்து வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்..,
வரவேற்பு பத்திரிக்கையை
எனக்கு தந்துவிட்டு?!
மணமேடையில்
மணப்பெண்ணாய் என்னவள்?!!
மணக்கோலத்தில் இருந்ததைக் கண்டு...,
அலங்கோலமாய் நான்
அழுதுகொண்டே வெளிசென்றேன்...
நான் பத்திரப்படுத்த சொன்னது
பரிசை அல்ல?! காதலியையென்று
மாப்பிளைக்கு தெரியாது...
நான் இன்றும் அவள்தந்த
வரவேற்பு பத்திரிகையையோடு.....,
அவளின் நினைவுகளையும்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேனென்று
என் காதலிக்கும் தெரியாது...!